தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்- பிரிட்டன்.

சமுதாய சொந்தங்களே....!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...சமுதாய சொந்தங்களே! ஏழு கடல் கடந்தாலும் சமுதாயக்கடமையை மறக்க மாட்டோம் என, தாயகத்தில் நமது வாழுவுரிமை பெற உழைக்கும் த மு மு காவிற்கு புதிய கரம் கொடுக்க வந்திருக்கும்...த மு மு க-பிரிட்டன் கிளையை பிரிட்டனில் வசிக்கும் சொந்தங்களுக்கு அறிமுகம் செய்தீர்களா..?....www.tmmkuk.blogspot.com

Wednesday 17 June 2009

தமுமுக வரலாற்றில் இலண்டன் பள்ளிவாசல்!

சவுத் இலண்டனில் அமைந்துள்ள குரைடன் மஸ்ஜித் மற்றும் இஸ்லாமிய மையம், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக வரலாற்றோடு இணைந்துவிட்டது!
ஆமாம்!


குரைடன் பள்ளியோடு தொடர்புடைய தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆயிரத்தை தொட்டுநிற்பர்! ஆனால், பள்ளியின் வரலாற்றில் இதுவரை தமிழ் பேசும் இஸ்லாமிய சமூகக்கூட்டம் நடைபெற்றதில்லை.
அதற்கு அவர்களும் முயற்சித்ததுமில்லை.


ஆனால்,த மு மு கத்தலைவர்Dr,Pro., MH.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பிரிட்டன் பயணத்தை அறிந்த குரைடன் பகுதி தமுமுகவினர் தலைவரிடம் அனுமதிப்பெற்று பள்ளிவாசல் நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது தமிழகத்திருந்தா...? தேதிப்பார்த்து சொல்கிறோம் எனக்கூறினர்.


ஆனால், அவர்களின் மழுப்பலை புறிந்துக்கொண்ட கழகத்தினர் தலைவரின் - தமுமுகவின் போராட்ட ,சாதனை வரலாறுகளை கடிதமாகவே கொடுத்தனர்!

அவ்வளவுதான் தலைகீழ் மாற்றம்!

இப்படியொரு முஸ்லிகளின் சாதனை மிக்க இயக்கமா...?பாபரி பள்ளி வாசல் தொடங்கி முஸ்லிகளின் வாழ்ழுரிமை போராட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளி வாசல்கள் மீட்பு, முஸ்லிம்களின் அன்றாட பிரச்சினைகள்....ஆம்லான்ஸ் சேவை, சுனாமி...



அதன் தலைவரும் இந்திய முஸ்லிம்களின் சார்பில் அய்.நா மாமன்றம் வரைச்சென்று பேருரை நிகழ்த்தியுள்ளார்...இந்தியாவில் இஸ்லாமிய வங்கியை ஏற்படுத்துவதற்கு தொடர் முயற்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார் இந்திய முஸ்லிம்களின் வலிமை மிக்க தலைவராக திகழ்கிறார்....



பள்ளியில் உரை நிகழ்த்த எத்தனை நாட்கள் வேண்டும் என்றனர்.தேதி உள்ளதா இல்லையா என பார்த்து சொல்வதாக சொன்ன பள்ளி நிர்வாகிகள்!( புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!)



தலைவரிடம் அனுமதிப்பெற்று ஜூன் 15 ஆங்கில உரையும் 16 தமிழ் உரையும் அஸர் தொழுகைக்கு பின் என நிர்வாகத்திடம் தகவல் சொல்லப்பட்டது!


தமுமுக வரலாற்றில் இலண்டன் பள்ளிவாசல்! தொடரும்....


Template by - Abdul Munir | Daya Earth Blogger Template